உலக பிஸியோதெரபி தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி உறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் C.S.I மிஷன் பொது மருத்துவமனையில் பிசியோதெரபி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர். சத்தியசீலன் கலந்து கொண்டார்.
மேலும் விழாவில் எலும்பு மூட்டு மருத்துவர் அருண்இம்மானுவேல். மருத்துவர். ஆபிரகாம் மற்றும் பிஸியோதெரபி கல்லூரி மருத்துவ மாணவர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பிசியோதெரபிக்கான விழிப்புணர்வு மற்றும் புதிய நுட்பங்களை குறித்து பிஸியோதெரபி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை பிஸியோதெரபிஸ்ட் ஸ்டெயின்சாமுவேல் மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.
0 Comments