NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** SDPI கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

SDPI கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

 திருச்சி தெற்கு மாவட்டம்,  மேற்கு தொகுதி உட்பட்ட  பீமநகர் பகுதி 51 வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கிளை தலைவர் முகமது ஆசிப் தலைமையில் நேற்று  நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி தெற்கு  மாவட்ட துணை தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட  செயலாளர் மதர்.Y.ஜமால் முகமது,SDTU மாவட்ட துணை தலைவர் மீரான் மைதீன்,மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 




இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் பலர் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

மேலும் மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா, பீம நகர் கிளை துணைத் தலைவர் பக்ருதீன், கிளை துணைச் செயலாளர் உமர் அலி,கிளை பொருளாளர் அமீருதீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments