NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சீரங்கராயபுரம் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 100 வருடத்திற்க்கு மேலாக 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் அந்த பகுதியில் இடம் எனக்கு தான் செந்தமென அப்பொதுமக்களை திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் அடி ஆட்கள் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று ராஜா என்பவரின் வீடு பழமையாகிவிட்டதால் விழும் அபாயத்தில் இருந்த நிலையில் வீட்டை இடித்த போது அங்கு வந்த நரேஷ் குமார் என் இடத்தில் என்ன செய்கிறிர்கள் என மிரட்டியுள்ளார் உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்த பொது மக்களை அப்புறப்படுத்தி வாகனங்களை சரி செய்தனர்.


இந்த சாலை மறியலால் திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments