BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் மனித சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு

திருச்சியில் மனித சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு

திருச்சியில் நாளை நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்க SDPI   கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அழைப்பு விடுத்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ
கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
திருச்சியில் நாளை( செவ்வாய்க்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்துள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் எஸ் டி பி ஐ கட்சியினரும் பங்கேற்க இருக்கிறார்கள். ஆகவே நமது கட்சியின் தலைவர்கள், செயல்வீரர்கள் தவறாது கலந்து கொண்டு அன்பையும் அமைதியும் வலியுறுத்தி 
 விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ள  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றியடைய உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments