திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன் பெரும் வகையில் திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை மற்றும் தங்கமயில் ஜுவல்லரி இணைந்து பிரிமியம் அதிநவீன கண்புரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திருச்சி சாலை ரோட்டில் பழைய கோஹினூர் திரையரங்கம் எதிர்புரம் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் கூட்டரங்கில் நடைபெற்றது...
இம்முகாமினை திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரமேஷ் டாக்டர் மீனாகுமாரி ஆகியோரின் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு இம்முகாமிற்க்கு வருகைபுரிந்த பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்...
இம்முகாமில் பரிசோதனை செய்து கொண்டதில் 40 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் தங்கமயில் ஜுவல்லரி நகை மாளிகையின் சார்பில் செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ. தாமஸ் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் கார்த்திகா அல்லிகெடி அனுஷ்மா நந்தினி மைக்கேல் ஷேக் அப்துல்லா பார்த்திபன் கார்திகேயன் மணி சுந்தர் சரண் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு இம் முகாமிற்கு வருகை புரிந்த பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்..
மேலும் சமூக ஆர்வலர் நாசிய அவர்கள் தலைமையில் கணேஷ் எடல் பிராங்க்ளின் அப்துல் ஹக்கீம் கார்த்தி ரோஷினி சுபாஷினி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்
0 Comments