BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இலவச வீட்டு மனை பட்டா பெற்றவர்களுக்கு அத்துக்கல் நட்டு அளந்து கொடுக்க கோரிக்கை

இலவச வீட்டு மனை பட்டா பெற்றவர்களுக்கு அத்துக்கல் நட்டு அளந்து கொடுக்க கோரிக்கை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில்சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.


அந்த மனுவில் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் கிழக்கு பகுதியில் சுமார் 140 மனைகளாக பிரிக்கப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவசமாக வழங்கப்பட்டது பட்டுள்ளது,



இந்த இடத்தில் வீட்டு மனை பட்ட பெற்றவர்களுக்கு அத்துக்கள் ஊன்றுவதற்கு அளந்து கொடுக்கப்படாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்,இதனால் இந்த இடத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு உள்ளனர்.எனவேஇலவச வீட்டு மனை பட்டா வழங்கியவர்களுக்கு அவர்களின் இடத்தை அளந்து கொடுத்து அத்துக்கள் ஊன்றுவதற்குமாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்,

Post a Comment

0 Comments