NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அடக்க ஸ்தலத்திற்கு இடம் கோரி இடிமுரசு இஸ்மாயில் முதல்வரிடம் மனு

அடக்க ஸ்தலத்திற்கு இடம் கோரி இடிமுரசு இஸ்மாயில் முதல்வரிடம் மனு

திருச்சி திருவெறும்பூர் பாப்பா குறிச்சியில் இன்று பள்ளி மாணவர்களுக்கான வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்ற அவருக்கு அரியமங்கலம் சோதனை சாவடி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


அப்போது, திருச்சி வடக்கு காட்டூர் பாப்பா குறிச்சி ரோடு அர்  ரகுமான் மஸ்ஜித் பள்ளிவாசல் அமைப்பின் நிர்வாகிகள் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் முதலமைச்சரிடம்  ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.அதில் திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் இஸ்லாமிய மக்கள் 500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். 




நாங்கள் மிகவும் ஏழைகளாக இருக்கிறோம். எங்களில் இறப்பவர்களை அடக்கம் செய்திட கபர்ஸ்தான்( மையவாடி) இல்லை.எனவே தாங்கள் எங்களுக்கு அரசு சார்பில் கபர்ஸ்தானுக்கு இடம் வழங்க வேண்டும் என கூறி இருந்தனர். மனு அளித்த போது அந்த பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான், செயலாளர் ஹைதர் அலி,மாவட்ட துணைச் செயலாளர் முகமது இக்பால், இளைஞரணி தலைவர் மஜீத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments