BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உணவு வழங்கினார்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உணவு வழங்கினார்

தமிழக திமுக கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 

தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏழை எளியோவருக்கு நலத்திட்ட உதவிகள் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் அன்னதானங்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

தன் ஒரு பகுதியாக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையத்தில்  பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு கபசுர குடிநீர், உணவு பொட்டலங்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்துகளை  வழங்கி கொண்டனர்.


ந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments