டிஜிட்டல் கல்வி சார் சிறப்பு நிலைத்தன்மை மேம்பாடு மற்றும் உலக அமைதிக்கான புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் (SMTU) திரு.பைக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மலேசியாவின் 10 குகை முனீஸ்வரன் கோவில் பகுதியில் இரத்ததானம் நடைபெற்றது...
இந்த நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர் 105 பேர் ரத்ததான பதிவு செய்ததில் 84 பேர் தகுதி பெற்று ரத்த தானம் செய்தனர்... இது குறித்து புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் நிறுவனர் மற்றும் துணைவேந்தர் டாக்டர். ஆர்.விஜய சரஸ்வதி மேலும் பேசுகையில்.....
திரு.பைக்கஸ் தலைவர்.திரு.அப்பாஸ் கோவில் கோவில் அதிகாரி கந்தசாமி மற்றும் குழுவினர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் SMTU மற்றும் பைக்கர்ஸ் எக்ஸ்கோ உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.ஆயிரம் மைல்கள் பயணம் ஒரு அடியில் தொடங்குகிறது என்ற பழமொழிக்கு ஏற்ப ரத்ததானமே உயிரை காப்பாற்ற முதல் படி ..ஆறு மாதங்களுக்கு ஒரு ரத்ததானம் செய்வதன் மூலம் விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்ற முடியும்.. "சிறு பெரு வெள்ளம்" என்பது போல நம்முடைய இந்த சிறிய முயற்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம் என புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் நிறுவனர் மற்றும் துணை வேந்தர் ஆர்.விஜய சரஸ்வதி கூறினார்..
0 Comments