// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி மாநகராட்சி மேயரை சந்தித்து SDPI கட்சி மனு

திருச்சி மாநகராட்சி மேயரை சந்தித்து SDPI கட்சி மனு

திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பீமநகர் பகுதி 51 மற்றும் 52 வது வார்டில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், 51 மற்றும் 52 வது வார்டில் பாதாள சாக்கடை  திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் திருச்சி மாநகராட்சி மேயர் அவர்களிடம் SDPI கட்சி சார்பாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பீமநகர் பகுதி பொறுப்பாளர் சையது முஸ்தபா,51 வது வார்டு தலைவர் முஹம்மது ஆசிப், செயலாளர் பஷீர், துணைச் செயலாளர் உமர், 52 வது வார்டு தலைவர் அமீர்தீன்,துணைத் தலைவர் சுல்தான் மற்றும் செயலாளர் மன்சூர் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments