NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

திருச்சியில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

 தமிழ்நாடு சட்டமன்றத்தை அவமதித்த தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து 

தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் சமூக நீதி பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி  அரியமங்கலத்தில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் சம்சுதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.


போராட்டத்தில் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசை அவமதிக்கும் வகையிலும், தமிழக மக்களை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்ட தமிழக ஆளுநர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், மத்திய அரசு உடனே அவரை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.


இப்போராட்டத்தில் 

மாவட்ட மகளிர் அணி தலைவர் ஷைனி, இளைஞரணி செயலாளர் ஷர்புதீன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தமிழரசன், மாரியப்பன், கந்தவேல்குமார் 

உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர்

கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Post a Comment

0 Comments