திருச்சி மறை மாவட்ட கிறிஸ்தவர்கள் சார்பில் பொதுநிலையினர் பேரவை இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர்.முனைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டத்தில் கலந்து எட்டு மாதங்களாக நடந்து வரும் கிறிஸ்தவ படிங்குடியினருக்கு எதிரான வன்முறைகளையும் மத வெறி ஆட்டங்களையும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும், சுரூபங்கள் உடைக்கப்பட்டதையும் கண்டித்தும், அங்கு ஆதிவாசிகள் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களை தடுத்த வேண்டும், இடிக்கப்பட்ட தேவாலயங்கள் உடனடியாக சத்திஸ்கர் அரசு முன் நின்று கட்டி கொடுக்க வேண்டும், தாக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மத்திய அரச உடனடியாக சிறுபான்மையினர் அமைச்சரை அனுப்பி உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், சிறுபான்மை திட்டமிட்டு தாக்கும் பாசிச மத விரோத அமைப்புகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தோஷம் விட்டனர்.
என்.சி.டி.சி தேசிய ஆலோசகர் சார்லஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், போதகர் கிறிஸ்டோபர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித், திருச்சி மறை மாவட்ட ஆயர் பேரவை தலைவர் அருட்தந்தை ஜான் பிரிட்டோ, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, டி.இ.எல்.சி பாஸ்டர் சுந்தரம், திருச்சி மறை மாவட்ட முதன்மை அருட்தந்தை அந்துவான், மறை மாவட்ட பொது இளைஞர் பேரவை தலைவர் வேளாங்கண்ணி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தில் மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments