NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் குடியரசு தின விழா

 திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் சார்பில் இன்று 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஶ்ரீரங்கம் பகுதியில் இயங்கி வரும் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்று தேசிய கொடியேற்றப்பட்டது. 


கிழக்கு ரங்கா பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற சைவ ராஜி அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதன் பின்னர் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்க மாவட்ட தலைவர் S. மஞ்சுநாத் அவர்கள் கொடி ஏற்றப்பட்டு பின்னர் சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவச் செல்வங்களுக்கு  இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.









விழாவின் நன்றியுரை துணைச் செயலாளர் கவுதம் கார்த்திக் அவர்கள் வழங்கினார்....

இவ்விழாவில் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்க பொறுப்பாளர்கள் நல்லாண்டவர் தர்மர்,FLS டோமினிக் பிரான்சிஸ், அம்மன் மகேஸ்வரன்,SSR சரவணன், யுவனராஜ் , PNR மாரியப்பன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments