BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** டிராக்டர் ஏறி மிகுந்த விபத்துக்குள்ளாகி நெஞ்சகம், அடிவயிறு மற்றும் இடுப்பு எலும்புகள் நொறுங்கிய நிலையில் வந்த பெண்ணை காப்பாற்றிய அப்பல்லோ மருத்துவமனை

டிராக்டர் ஏறி மிகுந்த விபத்துக்குள்ளாகி நெஞ்சகம், அடிவயிறு மற்றும் இடுப்பு எலும்புகள் நொறுங்கிய நிலையில் வந்த பெண்ணை காப்பாற்றிய அப்பல்லோ மருத்துவமனை

திருச்சி அப்பல்லோ சிறப்பு  மருத்துவமனையில் டிராக்டர் ஏறி மிகுந்த விபத்துக்குள்ளாகி நெஞ்சகம், அடிவயிறு மற்றும் இடுப்பு எலும்புகள் நொறுங்கிய நிலையில் சிகிச்சைக்கு வந்த பெண்மணியின்  வாழ்வை மீட்டுத்தந்துள்ளது.


திருச்சி காட்டூர் பகுதியில் 

33வயது பெண் மீது டிராக்டர் மேலேறி மிகுந்த விபத்துக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், 


விபத்துக்குள்ளான பெண்ணை அவசர சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் மற்றும் குழுவினர்கள் பரிசோதித்ததில், முதுகு தண்டுவட எலும்புகள் நொறுங்கிய நிலையிலும், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு காணப்பட்டது. 



இப்பெண்ணை அவசர சிகிச்சை தலைமை மருத்துவர் பிரகாஷ் அருள்தாஸ் மற்றும் குழுவினர்கள் பரிசோதித்து தேவையான விரைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்கால மருத்துவ சிக்கல்களை கருத்தில் கொண்டு இவருக்கு லேப்ரோட்டமி எனப்படும் திறந்த நிலையில் வயிற்றுப் பகுதியை வைக்கப்பட்டு இவரை தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிக்கலை கருத்தில் கொண்டு ட்ராக்கியஸ்ட்டமி தீவிர எனப்படும் செயற்கை சுவாசத்திற்கு தேவையான valivagaigalai செய்து கண்காணிப்பு மருத்துவர்கள் 24மணிநேரமும் இவரை கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது


 தீவிர கண்காணிப்பில் இப்பெண்ணிற்கு திடிரென்று ரத்த அழுத்தம் மற்றும் ஹீமோக்ளோபின் ஆகியவைகள் குறைந்த நிலையில் இவரை அவசரமாக மீண்டும் அறுவை சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டார்.


லாப்ரோடோமி எனப்படும் திறந்து வைக்கப்பட்ட நிலையில் உள்ள அவரின் மன்சூர் வயிற்றுப்பகுதியை மருத்துவர் முகமது

மேலேறி கீழே இறங்கியதால் வயிற்று பகுதியில் உள்ளிருக்கும் பல உறுப்புகள் மிகுந்த சேதம் அடைந்து ரத்தக் கசிவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தன.


ட்ராக்டர் சக்கரங்கள் ஏறி இறங்கிய நிலையில் இப்பெண்ணின் அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் அவசர அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முஹமது மன்சூரால் இவருக்கு தேவையான வயிற்றுப் பகுதிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


02.01.2023 ஆம் தேதி மருத்துவர் விதுன் ராஜ் பரத் பிளாஸ்டிக் காயங்களை அறுவைசிகிச்சை செய்து நீக்கினார் அவர்களால் இப்பெண்ணின் மேலும் எழும்பியல் மருத்துவர் சிவபாலசுப்ரமணியன் அவர்களால் இவருக்கு இடுப்பில் உள்ள எலும்பு முறிவிற்கும் மூளை மற்றும் தண்டுவட மருத்துவர் மயிலன் அவர்கள் தண்டுவட சிகிச்சை அளித்தார். 


பல்வேறு கட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னல் இப்பெண்ணை தீவிர சிகிச்சை பிரிவில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் பரணீதரன், குமார், விக்னேஷ் மற்றும் முத்துவெங்கடேஷ் ஆகியோரால் தீவிர கண்காணிப்புடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் நுரையீரல் மருத்துவர் தமிழரசன் இவருக்கு பொருத்தப்பட்ட ட்ராக்கியஸ்டோமி எனப்படும் செயற்கை சுவாச உபகரணங்களை நீக்கினார் அன்று முதல் இவர் இயற்க்காக சுவாசிக்க இவருக்கு தேவையான பயிற்சி மற்றும் முழுமையான மருத்துவ உதவிகளை செய்தார்.


இவரின் அறுவை சிகிச்சைக்கு முக்கியமாக மயக்க மருந்துகளை தேர்வு செய்வதில் மிகவும் சவாலான நிலையில் மருத்துவர்கள் கார்த்திக் அழகப்பன் ஆகியோரால் நிர்வாகிக்கப்பட்டது மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கொடுக்கப்படவேண்டிய வலி நிவாரணிகளை இவர்களால் குறித்த நேரத்தில் சிறப்பாக பரிந்துரை செய்யப்பட்டது.


இப்படி பல்வேறு சிக்கலுக்குள்ளான டிராக்டர் மேலேறி இறங்கிய இந்த 33 வயது பெண்ணிற்கு வெற்றிகரமாக சிகிச்சைகளை அளித்து 15.01.2023 அன்று இவரை நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் மனமகிழ்ச்சியுடன் மருத்துவர்கள் இவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.


இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு திருச்சி அப்பலோலோ சிறப்பு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மேலும் 24 மணி நேரமும் சிறந்த  மருத்துவர்கள் திறன் வாய்ந்த கருவிகளுடன் இயங்கி கொண்டிருப்பதால் இவ்வித மருத்துவ தேவைகளையும் மருத்துவமனை பூர்த்தி செய்ய உதவி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 


சங்கீத் மருத்துவமனை நிர்வாக பொது மேலாளர் மற்றும் ஆனந்த ராமகிருஷ்ணன் மருத்துவமனை விற்பனை பிரிவு மேலாளர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments