ஶ்ரீராஜஸ்தான் விஷ்ணு சமாஜ் சங்கம் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஶ்ரீஅம்பே பாலாஜி ஶ்ரீபாபா ராம்தேவ்ஜி கோரி திருச்சி பெரிய கடைவீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது..
இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை 3 ஆம் தேதி நடைபெறுகிறது.. இதனை முன்னிட்டு நேற்று காவேரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. முன்னதாக காந்தி மார்க்கெட், மேலபுலிவார் ரோடு, பெரிய கடைவீதி, NSB ரோடு , மரக்கடை வழியாக ஶ்ரீஅம்பே மாதாஜி ஶ்ரீராம்தேவ் பாலாஜி சிலைகள் 20 ரதங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பபட்டன..
இதில் 15 குருமகராஜ்கள் , ராஜஸ்தான் மாநிலம் மற்றும் திருச்சியில் வசிப்பவர்கள் உட்பட 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.. நாளை 3 ஆம் தேதி அம்பே மாதாஜி ஶ்ரீராம்தேவ் பாபாஜி சிலைகள் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
-------------------------------------
நிருபர் - தேவாராம் படேல்
0 Comments