BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** சமூகநலச் செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சமூகநலச் செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மக்கள் சேவை துறை, திருச்சி சார்பாக சமூகநலச் செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மஸ்ஹர் ஷெரிஃப் இறைமறையை ஓதினார். மக்கள் சேவைத் துறை செயலாளர் சகோ. நவாஸ் கான் அனைவரையும் வரவேற்று பேசியதுடன், நிகழ்ச்சியை குறித்து அறிமுகப்படுத்தினார். முனைவர். ஹஜ் மொய்தீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஜமாஅத் கடந்த 75 ஆண்டுகள் தேசிய அளவில் ஆற்றிவரும் சமூகநல சேவைகள் குறித்து தனது உரையில் அவர் எடுத்துரைத்தார். இக்கட்டான காலங்களில் மக்களின் துயர் துடைக்கும் பணியை ஜமாஅத் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து செய்து வருகிறது. பேரிடர் நிவாரண உதவி முதல் மருத்துவ உதவி வரை பலதரப்பட்ட உதவிகளை அமைதியாக செய்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். திருச்சியில் சமூகநலச் செயற்பாட்டாளர்கள் ஆற்றிவரும் சிறப்பான சேவைகளை பாராட்டினார். இந்நிகழ்வில் பல்வேறு தலங்களில் சேவையாற்றி வரும் 31 சமூகநலச் செயற்பாட்டாளர்கள் மற்றும் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திருச்சி இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்க இணைச் செயலாளர் ஜனாப். காஜா மைதீன் மற்றும் கங்காரு கருணை இல்லம் திரு. ராணா ராஜா, ஜனாப். ஹனீபா மற்றும் ஜனாப். அப்துல் சலாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். 




விருதுகளை பெற்றுக் கொண்ட சமூக செயற்பாட்டாளர்கள் இந்நிகழ்ச்சி குறித்தும், ஜமாஅத் பணிகள் பற்றியும் தங்களது உளப்பூர்வமான கருத்துக்களை மனநிறைவுடன் பதிவு செய்தனர். இறுதியாக, சகோ. இஸ்மாயில் நன்றி தெரிவித்தார். ஜனாப். நவாஸ் கான் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக வழி நடத்தி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.




இதில் சமூகநல செயற்பாட்டாளர்கள், அவர்களது குடும்பத்தினர்கள், நண்பர்கள், மற்றும் குழுவினர், ஜமாஅத் நிர்வாகிகள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்





நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை வட்ட ஊழியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.


Post a Comment

0 Comments