BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சியில் செல்ல பிராணிகளுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

திருச்சியில் செல்ல பிராணிகளுக்கான இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் திருச்சி மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் திருச்சி பாலக்கரை அரசு சையது முர்தசா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. 


கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் எஸ்தர் சீலா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். 


முகாமில் பாலக்கரை கால்நடை பன்முக மருத்துவமனை பிரதம மருத்துவர் மகேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தினர். தொடர்ந்து வெறி நோய் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 



மேலும் வெறி நோய் குறித்தும், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவது குறித்தும்,  பிராணிகள் வதை தடுப்பு சட்டங்களை பற்றியும்,  பிராணிகள் வதை  தடுப்பு சங்கம் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments