BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்

ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்

 திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் எலும்பு மூட்டு சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர்.ரா.ஹரீஷ்குமார் அவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு, விபத்தில் சிக்கிய நபர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை மற்றும் அவர்களை கையாளும் விதம் பற்றிய சிறப்பு பயிற்சியினை அளித்தார். சுமார் 20 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ரோஸ்கார்டன் பாரமெடிக்கல் பயிற்சி கல்வி நிறுவனம் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கும் அவசர கால உதவியாளர்களுக்கும் விபத்து நேரத்தில் உயிரைக்காப்பாற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சிகிச்சை உதவிகள் பற்றிய ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. 



இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments