NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ஆழ்துளை கிணற்றை தடை செய்ய கோரி சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மனு

ஆழ்துளை கிணற்றை தடை செய்ய கோரி சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மனு

 திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் மிக பிரம்மாண்டமான ஆழ்துளை கிணறு அமையவுள்ளது.. 


ஏற்கனவே அந்த பகுதியில் நிறைய ஆழ்துளை கிணறு உள்ளது.. இதனால் இனாம்குளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் பஞ்சம், நிலத்தடி நீர் மட்டம் குறைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.. மேலும் புதிதாக ஏற்படும் ஆழ்துளை கிணறு காரணமாக மேலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அமைய இருக்கும் புதிய ஆழ்துளை கிணற்றை தடை செய்ய கோரி தமுமுக மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.. இந்த நிகழ்வில் சமூக நீதி மாணவர் இயக்கம் மாநில துணை செயலாளர் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணை செயலாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments