NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ கட்சி மனு

குண்டும் குழியுமான சாலை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ கட்சி மனு

 குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்தி தருமாறு லால்குடி  எஸ்டிபிஐ நகர நிர்வாகிகள் சார்பில்  கட்சியினுடைய மாவட்டத் துணைத் தலைவர் ஹக்கீம்  தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் மனு கொடுத்தனர் No- 1டோல்கேட்  முதல் தாளக்குடி, லால்குடி தொடர்ச்சியாக சிதம்பரம் செல்லும் வரையிலான பாதையில் அதிகப்படியான குண்டும் குழியுடனும் சாலை மிகவும் சீர்குலைந்துள்ளது...


இவ்வழித்தடத்தில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் கனரக  வாகனங்கள் ,பள்ளி  செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் என்று தொடர்ந்து நாள்தோறும் பயணித்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் செல்பவர்கள் மிகவும் ஆழமான படு குழிகள் இருப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த காயத்துடன் எழுந்து செல்கின்றனர் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படதாவாறு பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணமாக அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைத்து தர மனு அளிக்கப்பட்டது. அருகில் லால்குடி நகர தலைவர் சாதிக் உள்ளார் 

Post a Comment

0 Comments