BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

 மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில்  நடைபெற்றது.

மமக மாநில துணை பொதுசெயலாளர் தஞ்சை பாதுஷா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி நிர்வாகிகளிடம் உரையாற்றினர். 


IPP மாநில துணை செயலாளர் சகோ ரபீக், SMI மாநில துணை செயலாளர் சகோ அப்பீஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர். 


திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா, மேற்கு  மாவட்ட மமக செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

1. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி யை கண்டித்து வரும் 17.03.2023 அன்று மாலை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா ஜவாஹிருல்லா MLA, அவர்கள் தலைமையில் நடைபெறும் 'சவ பெட்டிகளுடன் ஆளுநர் மாளிகை முற்றுகை போரட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்டத்தின் சார்பில் பெரும்திரளாக பங்கேற்பது.


2. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் பூத் பொறுப்பாளர்களை நியமித்து ஆலோசனை கூட்டங்களை நடத்துவது என்றும்,


3.கோடை வெயில் காலத்தை முன்னிட்டு மமக சார்பில் தண்ணீர் பந்தல்களை திறப்பது 


4. IPP சார்பில் 19.03.2023 அன்று மேற்கு மாவட்டம் சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


மாவட்ட துணை செயலாளர்கள் இம்ரான், A. அப்துல் சமது, அசாருதீன், ஹுமாயூன் கபீர், அப்துர் ரஹ்மான், S. அப்துல் சமது உள்ளிட்ட மாவட்ட அணி செயலாளர் மற்றும் பகுதி, வார்டு ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments