NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி மதுரம் மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

திருச்சி மதுரம் மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம்

 மதுரம் மருத்துவமனை, மதுரம் சுகாதாரம் கல்வி சேவா அறக்கட்டளை மற்றும் கிறிஸ்டியன் யூனிட்டி பெடரேசன் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மதுரம் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. மருத்துவர்கள் ஐவன் மதுரம், ஷர்மிலி மதுரம் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் பொது மக்கள், தன்னார்வலர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.


இது குறித்து மருத்துவர் ஐவன் மதுரம் கூறுகையில்....


இரத்ததானம் செய்வதால் மாரடைப்பு வருவது குறைக்கப்படுகிறது. மேலும் இதயம் சம்மந்தமான நோய்கள் அனைத்தும் தடுக்கப்படுகிறது. புதிய இரத்த அணுக்கள் உருவாக ஊக்கப்டுகிறது. 



தேவையற்ற கொழுப்பு குறைக்கப்டுகிறது. தொடர்ந்து இரத்ததானம் செய்வதால் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மேலும் தற்போது அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் இரத்தத்தின் தேவை அதிகரித்து வருகிறது. 





ஆதலால் அனைவரும் இரத்ததானம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments