NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தெரு நாய் மற்றும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க கோரி - SDPI கட்சி ஆர்பாட்டம்

தெரு நாய் மற்றும் வெறி நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க கோரி - SDPI கட்சி ஆர்பாட்டம்

திருச்சியில் SDPI கட்சி சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி  நிர்வாகத்தை கண்டித்து  SDPI கட்சி ஆழ்வார் தோப்பு கிளை சார்பாக கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தொண்டரணி மாவட்ட செயலாளர் ஆரிப் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் பக்ருதீன் மேற்கு தொகுதி துணை தலைவர் KSA.ரியாஸ் மற்றும் தொகுதி செயலாளர் K.முஹம்மது சலீம்,ஊடக அணி மாவட்ட செயலாளர் உபைதூர் ரஹ்மான் ஆகியோர்கள்  முன்னிலை வகித்தனர்.






இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி.அப்பாஸ் மற்றும் மேற்கு தொகுதி தலைவர் சிராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரியும்,பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கண்டன உரையாற்றினார்கள்.


இறுதியாக கிளை செயலாளர் இரும்புக் கடை முஸ்தபா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Post a Comment

0 Comments