// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா

 திருச்சி தேசியக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமின் நிறைவு விழா இன்று கூட்ட அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் முனைவர். கி.குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். 


துணை முதல்வர் முனைவர். பிரசன்ன பாலாஜி வாழ்த்துரை வழங்கினார்.முனைவர்.கு.ஐநா திட்ட அலுவலர் அலகு அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முனைவர்.ம. சௌரியார் துரைசாமி திட்ட அலுவலர் அலகு 1 அவர்கள் முகாம் அறிக்கை வாசித்து நன்றியுரை கூறினார். முனைவர் . ச.கருத்தான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ம. சௌரியார் துரைசாமி , முனைவர் ச. கருத்தான் மற்றும் முனைவர் ஐனா செய்திருந்தனர்...


நிருபர் ரூபன்


.

Post a Comment

0 Comments