NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி அரசியல் தலைவர்களுடன் தமஜக தலைவர் செரீஃப் சந்திப்பு

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி அரசியல் தலைவர்களுடன் தமஜக தலைவர் செரீஃப் சந்திப்பு

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரீஃப் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.



இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரீஃப் தலைமையிலான குழுவினர் அனைத்து கட்சி எம்எல்ஏ.க்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த வகையில் இரண்டாம் கட்டமாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தமஜக தலைவர் கே.எம்.செரீஃப்  தலைமையில் தமஜக நிர்வாகிகள் சந்தித்தனர்


இஸ்லாமிய  ஆயுள் சிறைவாசிகள் 28  ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை  காலம் முடிந்தும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அவர்களின் விடுதலைக்காக நேரில் சந்தித்து   சிறைவாசிகள் பற்றிய கோப்புகள் மற்றும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது




.இதேபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, திமுக சட்டமன்ற உறுப்பினர்  தஞ்சை நீலமேகம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தொகை ஆகியோரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு மற்றும் கோப்புகளை அளித்தனர.


 இந்த நிகழ்வின் போது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் சண்முகராஜா, அன்சர் மில்லத் தமிழ் ஜெய்லானி பாண்டியன் திருச்சி ரியாஸ், கம்பம் அப்துல் ரஷீத் தன்வீர் முகமது தாஹா பெஸ்ட் பாரூக் ஆகியோர் உடன் சென்றனர்.

Post a Comment

0 Comments