BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி திருச்சி தமஜக சார்பில் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம்

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி திருச்சி தமஜக சார்பில் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம்

 தமிழக சிறைகளில் நீண்ட நாட்களாக இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிப் அவர்கள் தலைமை தாங்கினார் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் மாநில செயலாளர் ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட பேச்சாளர் பாலக்கரை ஜாகிர் ஷரீப் வரவேற்பு உரையாற்றினார்.



தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவர் சி மகேந்திரன்  அவர்களும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினுடைய மாநில துணைத்தலைவர் டிவி கதிரவன் அவர்களும் மே 17 இயக்கத்தினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய தலைவர் குடந்தை அரசன் அவர்களும் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினுடைய தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் அவர்களும் அதிமமுக தலைவர் பசும்பொன் பாண்டியன் அவர்களும் ஏ ஐ டி யூசி உடைய மாநில துணைத்தலைவர் பி எல் ராமச்சந்திரன் முன்னாள் கோவை சிறைவாசி கோவை பல் நாசர் அவர்களும் அவர்களும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய தலைவர் கே எம் கே ஹபீப் ரஹ்மான் அவர்களும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய துணைத் தலைவர் இமாம் ஆர்.ஹஸ்ஸான் பைஜி அவர்களும். திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினுடைய துணைத் தலைவர் பா உதுமான் அலி அவர்களும் அவர்களும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் சண்முகராஜா துணை பொதுச்செயலாளர் சபி அகமது அவர்களும் மாநில துணைத் தலைவர்  அன்சர் மில்லத் அவர்களும் மாநிலத் துணைத் தலைவர் மெஹராஜ்தீன் அவர்களும் இணையதள பொறுப்பாளர் சரிப்ராசிக் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். 



தமஜக தலைவர் கே எம் சிரிப் அவர்கள் பேசும்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகளை அனைவர்களையும் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு உடனடியாக விடுவிக்காவிட்டால் மே 12 வேலூர் மத்திய சிறையை முற்றுகையிடுவோம் மேலும் தாமதிக்கப்பட்டால் தமிழக முதல்வர் முதலமைச்சரின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனத்தை ஆங்காங்கே வழிமறைப்போம் இது ஏதோ வெறும் வாய் பேச்சுக்காக சொல்வதாக எடுத்து விட வேண்டாம் என்றும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் அடுத்த முதல்வரும் நீங்கள் தான் என்று கூறினார். பாலக்கரையில் இந்த பொதுக்கூட்டத்தால் ஒரு வழி முழுவதுமாக அடைக்கப்பட்ட நாள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பொதுக்கூட்ட மேடையில் வைப்பதற்காக சிறை மாதிரி செய்து எடுத்து வரப்பட்டது சிறை மாதிரியை நிகழ்ச்சியில் வைக்ககாவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ்சாருக்கும் தமஜக வினருக்கும் நீண்ட நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட துணை செயலாளர் காஜாமைதீன்.மாவட்ட பொருளாளர் பீமநகர் சாகுல். மாவட்ட பேச்சாளர் பாலக்கரை ஜாகிர் ஷெரீப்






பழனி பாபா பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.கே.காஜமைதீன்.மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தென்னூர் கலில்ரகுமான் வர்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் முனாப் திருச்சி மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ் பீர் முகமது திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் ரபீக்ராஜா மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பெஸ்ட் பாருக் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முகமது இக்பால் பழனி பாபா பேரவை மாவட்ட துணை செயலாளர் அபூபக்கர் சித்திக் ஹஜ்ரத்.கிழக்கு சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் முபாரக் அலி மாணவரணி செயலாளர் அப்துல் அஜீஸ் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் பாலக்கரை பகுதி செயலாளர் பாஷா கான் ஜங்ஷன் பகுதி செயலாளர் பீமநகர் சித்திக் உறையூர் பகுதி செயலாளர் ஷேக் அப்துல்லா பாலக்கரை பகுதி துணை செயலாளர் முஸ்தாக் ஆட்டோ தொழில் சங்க கிழக்கு தொகுதி செயலாளர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்கள் இறுதியாக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாகா அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் மற்றும் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தென்னூர் கலில்ரகுமான் ஆகியோர் செய்து இருந்தனர்.கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments