BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** குடும்பம் நடத்தி ரூ.7 லட்சம் அபேஸ் செய்ததாக பெண் மீது பாரதிய ஜனதா கட்சி மண்டல துணைத் தலைவர் ஜெயராம் பாண்டியன் போலீசில் புகார் அளித்துள்ளார்

குடும்பம் நடத்தி ரூ.7 லட்சம் அபேஸ் செய்ததாக பெண் மீது பாரதிய ஜனதா கட்சி மண்டல துணைத் தலைவர் ஜெயராம் பாண்டியன் போலீசில் புகார் அளித்துள்ளார்

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் அரியமங்கலம் பகுதி மண்டல துணைத் தலைவர் ஜெயராம் பாண்டியன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், திருச்சி பொன்மலைப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். போர்வெல் வாகனம் தொழில் செய்து வருகிறேன் .

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியாக ஒரு வீடு எடுத்து நானும் அந்தப் பெண்ணும் ஒன்றாக வசித்து வந்தோம்.


திடீரென அந்த பெண் அவருடைய நண்பரான ராம்குமார் என்பவருடன் எனது வீட்டில் இருந்த ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு சென்னை சென்று விட்டார். 


சென்னை சென்று அந்த பெண்ணிடம் சமாதானம் செய்து மீண்டும் மூன்று மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தேன்.


கடந்த மாதம் 25ஆம் தேதி ராம்குமார் மற்றும் மைதிலி ஆகியோர் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டில் இருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தையும் 8 பவுன் நகையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். பின்னர் விசாரித்தபோது மைதிலிக்கு ஏற்கனவே பல ஆண்களுடன் திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.


இது குறித்து கடந்த மாதம் 29ஆம் தேதி பொன்மலை காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளேன் என்றார்.

Post a Comment

0 Comments