// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் - காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவுநாளை  முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரில் உள்ள ஜவகர்லால் நேருவின் திருவுருவ சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் கவுன்சிலர் ரெக்ஸ்,மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் மாநில பொதுச்செயலாளர் ஜி கே முரளி,மாவட்ட துணை தலைவர் மெய்யநாதன் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவா  உறையூர் எத்திராஜூ அண்ணாசிலை விக்டர் பட்டேல் மலைக்கோட்டை சேகர் செந்தமிழ் செல்வன் புத்தூர் சீனி உறந்தை செல்வம் அனந்த பத்மநாபன் கோட்டத்தலைவர்கள்


சிவாஜி சண்முகம் ஜோசப் ஜெரால்ட் ராஜா டேனியல் ராய், செல்வகுமார் பிரியங்கா பட்டேல்   இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சந்திரன், மற்றும் பலர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments