மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாணவர் அணியின் மாவட்ட செயலாளர் முகமது அஜுஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது..
சிறப்பு அழைப்பாளர்களாக தமஜக பொறுப்பாளர்கள் ராயல் சித்திக் அவர்களும் அபூபக்கர் ஆஜ்ரத் அவர்களும் கலந்து கொண்டு மாணவர் அணியின் எதிர்கால செயல்பாடு குறித்தும் மாணவர் அணியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாணவர் அணியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் மாணவர்கள் இடையே உரையாற்றினார்கள்.
புதிதாக நியமிக்கப்பட்ட மாணவரணி பொறுப்பாளர்கள் விவரம் கீழே வருமாறு.....மாவட்ட மாணவரணி பொருளாளராக உஸ்மான் அலி அவர்களும் மாவட்ட மாணவரணி துணை செயலாளர்களாக முகமது சாதிக் அவர்களும் அப்துல் அஜீஸ் அவர்களும் முகமது சுஹைல் அவர்களும். மாணவரணி புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள்.
அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா படம் எடுத்து வெளியிடும் சினிமா திரை உலக தீவிரவாதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் உண்மை தன்மையை உணர்ந்து தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தானாகவே முன்வந்து திரைப்படத்தினை திரையிட மாட்டோம் என்று அறிவித்த அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 Comments