NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி மாவட்ட தமஜக நிர்வாகிகள் கூட்டம் மாணவர் அணியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

திருச்சி மாவட்ட தமஜக நிர்வாகிகள் கூட்டம் மாணவர் அணியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

 மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்  திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாணவர் அணியின் மாவட்ட செயலாளர் முகமது அஜுஸ்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது..


சிறப்பு அழைப்பாளர்களாக தமஜக பொறுப்பாளர்கள் ராயல் சித்திக் அவர்களும் அபூபக்கர் ஆஜ்ரத் அவர்களும் கலந்து கொண்டு மாணவர் அணியின் எதிர்கால செயல்பாடு குறித்தும் மாணவர் அணியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாணவர் அணியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் மாணவர்கள் இடையே  உரையாற்றினார்கள்.



நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி துணை நிலை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்




புதிதாக நியமிக்கப்பட்ட மாணவரணி பொறுப்பாளர்கள் விவரம் கீழே வருமாறு.....மாவட்ட மாணவரணி பொருளாளராக உஸ்மான் அலி அவர்களும் மாவட்ட மாணவரணி துணை செயலாளர்களாக முகமது சாதிக் அவர்களும் ‌ அப்துல் அஜீஸ் அவர்களும் முகமது சுஹைல் அவர்களும். மாணவரணி புதிய பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள்.




மாணவரணியை வலுப்படுத்த திருச்சி மாவட்டம் முழுவதும்  பொறுப்பாளர்களை நியமித்து மாணவர் அணியை வலுப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். நாளை 8.05.2023 அன்று வெளியாகும் பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற மாணவரணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது. நாளை வெளியாகும் பிளஸ் 2 ரிசல்ட் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ரிசல்ட்யினை  இலவசமாக பிரின்ட் அவுட் எடுத்து விநியோகிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





இரண்டாம் அமர்வாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட தொகுதி பகுதிகள் அணிகளின்  பதவிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் தமஜக மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 




மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான் முன்னிலை வகித்தார் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் செயலாளர் ரபீக் ராஜா வரவேற்றார் புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்கள் நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். நிகழ்வில் மாவட்ட தொகுதி பகுதி அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை 2023 திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் பெருமளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்ற தமஜக மாவட்ட தொகுதி பகுதி அணிகளின் பொறுப்பாளர்கள் தங்களுக்கு அடுத்த நிலை பொறுப்பாளர்களை உருவாக்க வேண்டும்.





அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா படம் எடுத்து வெளியிடும் சினிமா திரை உலக தீவிரவாதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் உண்மை தன்மையை உணர்ந்து தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தானாகவே முன்வந்து திரைப்படத்தினை திரையிட மாட்டோம் என்று அறிவித்த அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments