NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக  சார்பில் தமிழகத்தில் தொடரும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை 


கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும்; இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மாநில இளஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






இதில் நிர்வாகிகள் மனோகரன், ரத்தினவேல், பூபதி,மலைக்கோட்டை ஐயப்பன் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments