BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்டு குடியரசு தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பாஜக எம்பி பிரிட்ஜ் பூஷன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் அஜீம் தலைமையில் நடைபெற்றது.


இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் கண்டன கோஷங்களை எழுப்பினார்.


இதில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட தபால் அட்டைகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.



இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஹுமாயூன், துணைத் தலைவர் அலாவுதீன், துணைச் செயலாளர் ஜாபர் ஷெரீப், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர்கள் நவாப் கான், இத்ரீஸ் துணைச் செயலாளர்கள் நியாஸ் அகமது, ராஜா, முகம்மது, மகளிர் அணி மாவட்ட தலைவர் முனைவர் பைரோஸ், பொருளாளர் ஆரிபா, துணைத் தலைவர் ஆயிஷா,தொழிற்சங்க செயலாளர் ஷாஜஹான், நிர்வாகிகள் அமீருதீன், ஆரிப், அப்துல் முத்தலிப், ரஷிதா பேகம், ராபியத்துல் பசரியா, நாகராணி, சாந்தி மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments