BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஆகாஷ் பைஜு மாணவன் நீட் தேர்வில் திருச்சியில் முதலிடம் பிடித்து சாதனை

ஆகாஷ் பைஜு மாணவன் நீட் தேர்வில் திருச்சியில் முதலிடம் பிடித்து சாதனை

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம்  மற்றும் AYUSH முதலிய படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் முதன்மை மருத்துவத் தகுதியைத் தொடர விரும்புபவர்களுக்கு தகுதித் தேர்வாக தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நீட் நடத்தப்படுகிறது.


நாடு முழுவதிலும் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்


நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது இதில் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆகாஷ் பைஜூ வில் பயின்ற மாணவன் கோவர்தன் திருச்சி நகரில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் இவர் 720 மதிப்பெண்ணுக்கு 700 எடுத்து அகில இந்திய அளவில் 232 ஆம் இடம் பிடித்துள்ளார் 



மேலும் அபர்ணா மார்சினா என்னும் மாணவி அகில இந்திய அளவில் 1854 ஆம் இடம் பிடித்துள்ளார்


அமுதன் என்ற மாணவன் அகில இந்திய அளவில் 2012 ஆம் இடம் பிடித்துள்ளார் இவர்களுக்கு பாராட்டு விழா கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆகாஷ் பைஜு நிறுவன வளாகத்தில் நடைபெற்றது 



இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகாஷ் பைஜு எவ்வாறு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி உறுதுணையாக உள்ளது என கூறினர்

Post a Comment

0 Comments