BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி மாநகர் மாவட்ட அமமுக அலுவலகம் திறப்பு விழா

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக அலுவலகம் திறப்பு விழா

 திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலக திறப்பு  விழா மாவட்ட அவை தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்புரை ஆற்றினார்.


தலைமை நிலைய செயலாளரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன்  அலுவலகத்தை திறந்துவைத்து குத்து விளக்கேற்றி அனைவருக்கும் லட்டு வழங்கினார்.


விழாவில் மாவட்ட நிர்வாகிகள் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வக்கீல் சரவணன், ஹேமலதா, தனசிங், ராஜா ராமனாதன், ஸ்ரீபிரியை, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், சண்முகம், சுரேஷ்குமார், குப்புசாமி, பகுதி செயலாளர்கள் வேதாத்ரிநகர் பாலு, கமுருதீன், உமாபதி, மதியழகன், கல்நாயக் சதிஷ்குமார்,கதிரவன், 


வெங்கட்ரமணி, அணி செயலாளர்கள் ஜெயலலிதா பேரவை பெஸ்ட் பாபு, இளைஞர் அணி நாகநாதர் சிவகுமார், மாணவர் அணி நாகூர்மீரான், தொழிற்சங்க பேரவை தண்டபாணி, வழக்கறிஞர் பிரிவு - பிரகாஷ், சிறுபான்மை அணி பகுருதீன்



மீனவர் அணி செல்வம், அமைப்புசாரா ஓட்டுநர் அணி கோபி, இளைஞர் பாசறை - ஜான் கென்னடி இளம்பெண்கள் பாசறை-நல்லம்மாள். தகவல் தொழில்நுட்ப பிரிவு என்.எஸ்.தருண், வெளிநாடுவாழ் தமிழர் நல துறை - நஜிப், கோல்டு லோகநாதன், மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள்,வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பலர் திரளாக கலந்துகொண்டனர். படவிளக்கம்: திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தை திறப்பு  விழா தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன் திறந்து வைத்தார். அருகில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வக்கில் சரவணன், ராஜா ராமனாதன், பெஸ்ட் பாபு மற்றும் பலர் உள்ளனர்.

Post a Comment

0 Comments