NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் புதியோர் தின விழா

திருச்சி தேசிய கல்லூரியில் புதியோர் தின விழா

திருச்சி தேசிய கல்லூரியில், பொருளாதார துறை சார்பாக  இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு புதியோர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது. 



இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் திரு.S. யுவன் சங்கர் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணை முதல்வர் முனைவர் இளவரசு அவர்கள் பொருளாதாரத் துறையின் வரலாற்றை பற்றி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.



 பொருளியல் துறை தலைவர் மற்றும் தேர்வு நெறியாளர் முனைவர் T.ஸ்ரீதர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.M. கார்த்திகேயன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு எதிர்காலத்தில் தங்களின் இலக்குகளை குறித்து விளக்கி கூறினார். துறையூர் வட்ட எல்ஐசி வளர்ச்சி அலுவலர் திரு. P. ஸ்ரீதர் அவர்கள் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கி எதிர்காலத்தில் உயர் கல்விப் பயில திட்டமிடுதலைப் பற்றி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி S.மீனா  நன்றியுரை கூறினார். முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் S.அபிராமி மற்றும் S.பிரியங்கா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். மேலும் புதியோர் தின விழாவில் மாணவ மாணவிகள் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் முனைவர் S.திருமாறன், முனைவர் K.ராஜேஷ், முனைவர் R.கீதா, முனைவர் G.ரகுநாத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments