BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான புகலிடமாக உருவெடுத்துள்ளது - ஐரா ஓவர்சீஸ் இயக்குனர் தீபா பேட்டி

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான புகலிடமாக உருவெடுத்துள்ளது - ஐரா ஓவர்சீஸ் இயக்குனர் தீபா பேட்டி

 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வியட்நாம் மருத்துவ கல்வி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்த மாநாடு வியட்நாம் மருத்துவக் கல்வி மற்றும் இந்திய மாணவர்களுக்கான அதன் பலன்களைப் பற்றி கென் தோ பல்கலைக்கழகத்தின் செசுடரான டாக்டர் குயென் ஆங் கியென் மற்றும் ஐரா வெளிநாட்டு ஆய்வுகளின் இயக்குநர்  தீபா உட்பட புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்துகொண்டு தெளிவான விளக்கத்தை வழங்கினர். 



இம்மாநாட்டின் தொடக்கமாக பாரம்பரிய விளக்குகள் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வியட்நாமின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. இந்த அமர்வு நிகழ்வானது வெளிநாட்டில் மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களையும், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களையும் மிகவும் கவரும் வகையில் இருந்தது. 


மேலும் ஐரா ஓவர்ஸீஸ் ஸ்டடீஸ் இயக்குநர்  தீபா  செய்தியாளர்களிடம் கூறுகையில்.. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் MBBS மற்றும் பிற மருத்துவப் படிப்புகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். வியட்நாம் சிறந்த மருத்துவக் கல்வி உள்கட்டமைப்பு. இந்தியாவை ஒத்த புவியியல் அமைப்பு, கலாச்சாரம் மற்றும் வானிலை உள்ள ஒற்றுமைகள் மற்றும் மலிவு கட்டண அமைப்பு ஆகியவற்றின் காரணமாக இந்திய மருத்துவ மாணவர்களுக்கான சிறந்த இடமாக உருவெடுத்துள்ளது. 





மேலும் சரியான வாய்ப்புகள் தனிதன்மை வாய்ந்த வழிகாட்டுதல் மற்றும் உதவி சேவைகள் மூலம் மருத்துவ ஆர்வலர்களை மேம்படுத்துவதற்கான ஐரா வெளிநாட்டு ஆய்வுகளின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் இந்திய மாணவர்களுக்கான சேர்க்கைக்கு வசதியாக வியட்நாமில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களுடனான நிறுவனத்தின் நெருங்கிய ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார். ஐரா ஓவர்சீஸ் ஸ்டடீஸ் இந்திய மாணவர்களுக்கு நாட்டில் சிறந்த மருந்துவக் கல்வியை அளிப்பதில் கவனம் செலுத்துவதுடன் வியட்நாமில் மருத்துவ சேர்க்கைக்கு முன்னோடியாக உள்ளது. வியட்நாம் தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டு. மருத்துவ  சேர்க்கைக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய நிறுவனம் இதுவாகும் என்று அவர் கூறினார். மேலும் டாக்டர் நுயென் டருங் கியென், கேள் தோ பல்கலைக்கழகத்தின் சலுகைகளை எடுத்துரைத்ததுடன். இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பற்றியும் வலியுறுத்தி கூறினார். குறிப்பாக இந்தியாவும் வியட்நாமும் கலாச்சார மற்றும் மத ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. வியட்நாமில் ஒரு வலுலான இருதரப்பு வர்த்தகம் வளர்ந்து வரும் மக்கள் தொடர்பு மற்றும் ஒரு செழிப்பான இந்திய சமூகம் வியட்நாமில் உள்ளது வியட்நாம் பரவலான ஆங்கில புலமை கொண்ட பாதுகாப்பான இருப்பதுடன் ஆர்வமுள்ள மருத்துவ நிபுணர்களுக்கான சிறந்த இடமாகவும் உள்ளது. கேன் தோ பல்கலைக்கழகம் ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார். அத்துடன் இந்திய மாணவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் என்ற கட்டணத்தில் முதன்மையான அரசு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மருத்துவத்திற்கான எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை படிக்கலாம்.  மேலும் படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் 100 சதவீதம் பணியிட அமர்வு உத்தரவாதத்தையும் இந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது என்று தெரிவித்தார்.



Post a Comment

0 Comments