தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் தலைமையில் மமக மாவட்ட செயலாளர் அசரப் அலி, மாவட்டத் துணை தலைவர் மு.சையது முஸ்தபா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
வரக்கூடிய ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் தேசிய கொடி ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டது...
செப்டம்பர் 30 அன்று நடக்கக்கூடிய நீண்ட நாள் தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தலைமை நடத்த இருக்கின்ற தமிழ்நாடு தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்திற்கு அனைத்து கிளைகளிலும் அதிகப்படியான நபர்களை கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது..
0 Comments