NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி மாநகராட்சி குடிநீரில் சாக்கடை கலப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்

திருச்சி மாநகராட்சி குடிநீரில் சாக்கடை கலப்பு கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்

 திருச்சி மாநகராட்சி 13 வது வார்டு வடக்கு ஆண்டாள் வீதி  பந்தடிமால் சந்து,பாண்டியன் பிள்ளை சந்து கடந்த பத்து நாட்களுக்கு மேல் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது


மாநகராட்சி பாதாள சாக்கடை பணியாளர்கள் பெயரளவுக்கு கடந்த மூன்று நாட்களாக பள்ளம்   வெட்டி குடிநீர் குழாயில் சாக்கடை கலப்பை கண்டுபிடிப்பது போல் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வேலை செய்துவிட்டு வந்த குடிநீர் குழாயையும் வெட்டிவிட்டு  சென்றுவிட்டனர்.

கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வருவதில்லை மக்கள் பெரிய பாடுபடுகின்றனர்.


கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை பகுதியை ஆய்வு செய்யவில்லை.ஆனால் இப்பகுதிக்கு மாநகராட்சி  பணியாளர்கள் தினசரி  வந்து செல்கின்றனர்.



மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாற்று ஏற்பாடுகள் உடனடியாக செய்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments