யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தின மலர் நாளிதழை கண்டித்து அறிக்கை வெளியீட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் மிகச்சிறந்த திட்டமான காலை உணவுத்திட்டம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடை அகற்றவும் முதல்வரின் உணவுத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னால் விரிவாக்கம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது...
இந்த திட்டத்தை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை திட்டத்தையும் பள்ளி குழந்தைகளையும் இழிவுப்படுத்தும் வகையில் சனாதன கொள்கையாக செயல்படும் பாசிச பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் தினமலர் நாளிதழில் தலைப்பு செய்தி காலை உணவுடன் மலத்தை ஒப்பிட்டு தங்களுடைய வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளனர்...
எனவே இதை செய்தியாக கடந்து செல்லாமல் தொடர்ச்சியாக பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் வன்மத்தை வெளிப்படுத்தும் தினமலர் பத்திரிக்கை மீது மாநில மனித உரிமை ஆணையம் தலையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளையும் மற்றும் உணவு திட்டத்தையும் கேவலப்படுத்தும் இந்நிறுவனத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து மனித நேயத்தை நிலை நிறுத்துமாறு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொண்டார்.
0 Comments