NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பொருளாதாரத் துறை மாணவர்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

பொருளாதாரத் துறை மாணவர்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

 திருச்சி தேசிய கல்லூரியில் பொருளாதார துறை சார்பாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி இலக்கியா வரவேற்புரை வழங்கினார்.


கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை வகித்தார். பொருளாதார துறை தலைவர் & தேர்வு நெறியாளர் முனைவர் து. ஸ்ரீதர் பெற்றோர்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். 



இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் பொருளாதார துறை பேராசிரியர்கள் கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் சிவசக்தி நன்றி கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியினை வகுப்பாசிரியர் முனைவர் R.கீதா ஒருங்கிணைத்தார்.


நிருபர் ரூபன் 


Post a Comment

0 Comments