திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் புதிய பேருந்து வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.துணை முதல்வர் முனைவர் து.பிரசன்னபாலாஜி வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் தலைமை தாங்கி தலைமையுரை நல்கினார். செயலர் திருமிகு கா.ரகுநாதன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
எக்ஸெல் குழுமத் தலைவர் திருமிகு முருகானந்தம் அவர்கள் புதிய குளிர்சாதன சொகுசுப் பேருந்தினை கல்லூரிச் செயலர் திருமிகு கா.ரகுநாதன் அவர்களிடம் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.வாழ்க்கையில் எப்போதும் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும்...
என்றும் குழந்தைகளை சுயமாகச் சிந்திக்க பெற்றோர் வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என்றும் உரை நிகழ்த்தினார்.சக மனிதர்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்றும் உலகம் முழுவதும் சகோதரத்துவம் பெற நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறப்புரை நல்கினார்.நிறைவாக துணை முதல்வர் முனைவர் பென்னட் அவர்கள் நன்றியுரை நல்கினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிருபர் ரூபன்
0 Comments