NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள தரங்கை வாசம் டிஎன்சி வளாகத்தில் அமைந்துள்ள பிஷப் ஹையர் உயர்நிலைப் பள்ளியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் விஷன் ஃபார் ஃபியூச்சர் இணைந்து மக்கும் குப்பை மக்கா குப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் ராபின்சன் அவர்கள்  திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை வழங்கினார்..

அதனை தொடர்ந்து தலைமை உரை மற்றும் சிறப்புரையாக முனைவர்.கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை ஆசிரியர் அவர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காவை பற்றி எடுத்துக் கூறினார்.. குப்பைகளை பொதுமக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் எப்படி நமது இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார் 


நிகழ்ச்சியின் இறுதியில் பிரதீப் உடல் கல்வி ஆசிரியர் மற்றும் என்சிசி ஆசிரியர் அவர்கள் நன்றி உரை வழங்கினார்..இந்த நிகழ்ச்சியில் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர் மற்றும் 10 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments