திருச்சி தேசிய கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் B.Voc (ICT) துறையும்,திருச்சி LiveWire மென்பொருள் தொழில் நுட்பமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விழாவினை தேசியக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.K. குமார் தலைமை ஏற்க, B.Voc(ICT) துறைத் தலைவர் N. பார்த்தசாரதி முன்னிலையில்,B.Voc (ICT) துணைத் தலைவர் S.பழனிச்சாமி ஒருங்கிணைப்பில், மாணவன் ஐயப்பன் தொகுத்து உரை வழங்க மாணவி M.சுவாதி வரவேற்புரை வழங்க விழா ஆரம்பமானது.
இந்த நிகழ்ச்சியில் LiveWire மென்பொருள் தொழில்நுட்ப நிறுவன நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் மற்றும் ஞானவேல், ரக்சன் கலந்து கொண்டு வளர்ந்து வரும் மென்பொருள் தொழில்நுட்பம் பற்றியும் அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் முதல்வர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவன் A.அப்துல் சமீர் நன்றியுரை வழங்க விழா நிறைவடைந்தது..
நிருபர் ரூபன்
0 Comments