NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க ஓயன்ஸ் ECG கருவியின் அறிமுக  நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டராமன் ராமபத்திரன் கருவியை அறிமுகம் செய்து வைத்து கருவியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார். 


அதில், உள்ளங்கை அளவுள்ள இந்த சாதனமானது எங்கும் எளிதில் எடுத்து செல்லக்கூடியதாகும். AI நுட்பத்தில் செயல்படக்கூடியது. இணைய வழி உதவியுடன் நேரடியாக ECG ஒளிபரப்பு செய்து உடனடியாக அறிக்கை தரக்கூடியதாகும் என தெரிவித்தார்.







 இந்த நிகழ்வில் ஹர்ஷமித்ரா கேன்சர் இன்ஸ்டடியூட் மருத்துவர் கோவிந்தராஜன், மருத்துவர் சிவம்,பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன், மாருதி மருத்துவமனையின் மருத்துவர் சிலம்பரசன்,மருத்துவர் மோகன், மருத்துவர் சசி பிரியா உள்பட மருத்துவத் துறையினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments