தமிழகம் முழுவதும் எர்த் மூவர்ஸ் சங்கத்தில் உள்ள நலிவடைந்தவர்களுக்கு ரூ. 25 லட்சத்திற்க்கான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமைத்து தர வேண்டும் - திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத்தினர் வேண்டுகோள்..
திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாபெரும் இயந்திர கண்காட்சி திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்டத் தலைவர் S.மஞ்சுநாத், மாவட்டச் செயலாளர் F.டோமினிக் ராஜ், பொருளாளர் P.தர்மர், துணை செயலாளர் கவுதம் கார்த்திக் மற்றும் செய்தி தொடர்பாளர் M.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். செந்தாமரை கண்ணன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட தலைவர் மஞ்சுநாத் சங்கத்தின் கோரிக்கைகளை முன் வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்சியான பிரமான்ட இயந்திர கண்காட்சியை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி துவக்கி வைத்தார். மேலும் புதிய வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தாளும், காப்பீடு மற்றும் வாகன வரி விலை உயர்வினாலும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது, எனவே வாகனங்களின் விலை மற்றும் வாகன வரியை குறைக்க கோரியும் வாடகையை உயர்த்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் ஹிட்டாச்சி செயின் வண்டியை உள்ளூர் பணிகளுக்கு குறைந்த பட்சம் 5 கிலோ மீட்டருக்குள் எடுத்து செல்லும் பொழுது சேல் டாக்ஸ் அதிகாரிகள் ஈ வே பில் கேட்டு, பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். ஆகையால் திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு திருச்சி மாவட்டத்திற்குள் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு "ஈ வே" பில் இல்லாமல் ஹிட்டாச்சி வாகனத்தை எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கையாக வைக்கிறோம் என தெரிவித்தார்.
0 Comments