திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் பொருளாதாரப் பேரவையின் சார்பாக சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் கி. குமார் தலைமை தாங்கினார். தேர்வு நெறியாளரும் பொருளாதாரத் துறைத்தலைவருமான முனைவர் து. ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் இரா. இளவரசு வாழ்த்துரை வழங்கினார். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் எம். சிவசக்தி, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பொருளியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் எஸ். திருமாறன் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் பொருளியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் A. அன்னாதுரை, "மின்னனுவியலில் முன்னேற்றப் பாதையில் இந்தியா" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக செல்வி எஸ். மீனா, வரவேற்புரை ஆற்ற, நிறைவாக முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி எஸ். அபிராமி நன்றி நவின்றார். பொருளாதாரத் துறையின் நூற்றிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைப் பொருளாதாரத் துறை மாணவிகள் எஸ். பிரியங்கா மற்றும் ஜே. ரோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். பொருளாதாரப் பேரவையின் துணைத்தலைவர் முனைவர் G. ரகுநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிருபர் ரூபன்
0 Comments