// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தேசிய கல்லூரியில் பொருளியல் பேரவைச் சிறப்பு சொற்பொழிவு

தேசிய கல்லூரியில் பொருளியல் பேரவைச் சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் பொருளாதாரப் பேரவையின் சார்பாக  சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் கி. குமார் தலைமை தாங்கினார். தேர்வு நெறியாளரும் பொருளாதாரத் துறைத்தலைவருமான முனைவர் து. ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் இரா. இளவரசு வாழ்த்துரை வழங்கினார். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் எம். சிவசக்தி, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பொருளியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் எஸ். திருமாறன் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார்.


இந்த நிகழ்வில் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் பொருளியல் துறை இணைப்பேராசிரியர்  முனைவர் A. அன்னாதுரை,  "மின்னனுவியலில் முன்னேற்றப் பாதையில் இந்தியா" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக செல்வி எஸ். மீனா, வரவேற்புரை ஆற்ற, நிறைவாக முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி எஸ். அபிராமி நன்றி நவின்றார்.      பொருளாதாரத் துறையின் நூற்றிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்   கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைப் பொருளாதாரத் துறை மாணவிகள் எஸ். பிரியங்கா மற்றும்  ஜே. ரோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.  பொருளாதாரப் பேரவையின் துணைத்தலைவர் முனைவர் G. ரகுநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments