இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ரவிக்குமார், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 14வது தமிழ்நாடு மாநில மாநாடு திருச்சியில் நாளை மற்றும் நாளை மறுதினம் (ஜூலை 25, 26) இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டை அகில இந்தியப் பொதுச்செயலாளர் டிபார்சிஸ் பாசு துவக்கி வைக்கிறார். மேலும் இம்மாநாட்டில் சிஐடியு மாநில செயலாளர் கண்ணன், கீழவேலூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிட்டி கட்சி எம்.எல்.ஏ. லதா, அகில இந்தியத் தலைவர் தோழர் அனில் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
1969 ஜூலை 19-க்கு முன்பு வரை 14 வணிக வங்கிகள் தனியார் வசம் இருந்ததால், சாதாரண மக்களால் அணுக முடியாத நிலையிருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர்தான், பொதுமக்களின் சேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மக்களையும், விவசாயிகளையும், மாணவர்களையும், பெண்களையும் சென்றடைந்தன.
பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் தொடர்ந்து பொதுத்துறையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவைகளைத் தனியார் கைகளில் ஒப்படைக்கும் அரசின் முயற்சிகளை சம்மேளனம் தொடர்ந்து எதிர்த்து முறியடிக்கும்.




0 Comments