BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் விழா

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கும் விழா

திருச்சியில் 1325 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 79.08 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 


இந்த விழா நிகழ்வில்,  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (08.02.2024) பார்வையிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த 1325 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 79.08 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், சீ.கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments