ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் நான்கு கோடியே மூன்று லட்சம் செலவில் ஒரு நூலகம் உட்பட கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசுக்கு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் அதேபோல் இந்த மணிமண்டபத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு மற்றும் படங்கள் அடங்கிய ஆவணங்களை மணிமண்டபத்தில் வைக்கக் கோரியும் அதேபோல் முக்கியமாக மூன்று பேரின் மணிகண்டங்களுக்கு அருகே உள்ள மதுபான கடையை உடனடியாக அகற்றக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
0 Comments