தோல்வி பயம் காரணமாக மோடி சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார் - திருச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் திருச்சியில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்றத் தேர்தல் குறித்ததான ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா
இந்தியா கூட்டணி தற்போது பலமாக உள்ளது ஒரு மாதத்திற்கு முன்பாக நீங்கள் கேட்டிருந்தால் தயக்கமாக இருந்திருக்கும் தற்பொழுது இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தோல்வி பயம் பாஜகவுக்கும், மோடிக்கும் வந்துள்ளது. எனவே, அவசர அவசரமாக விதிமுறைகளை வகுத்து சிஐஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.
0 Comments