NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் இரவு நேரத்தில் மின்வெட்டு தமஜக முற்றுகை போராட்டம் அறிவிப்பு

திருச்சியில் இரவு நேரத்தில் மின்வெட்டு தமஜக முற்றுகை போராட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தற்போது சமீப காலமாக இரவு நேரத்தில் மின் வெட்டு அதிகரித்துள்ளது.


மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமஜக அறிவிப்பு.திருச்சியில் இரவு நேர மின்வெட்டை சரி செய்யாவிட்டால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் அறிவிப்பு..


சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் சிக்கி தவிக்கும் திருச்சி வாழ் மக்களின் இரவு தூக்கத்தில் மண்ணள்ளி போடும் வேலையை ஒரு மாத காலமாக தொடர்ந்து திருச்சி மின்சார வாரியம் செய்து வருகிறது.இதை திருச்சி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது...


இரவு நேரங்களில் மின்வெட்டு இனியும் தொடர்ந்தால் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments